2/18/08

பிறவிக்கடன் தீர்ப்பாய்........



என் கண்ணைத் தொட்ட பூவே...
என்னை உன் நெஞ்சில் வைத்துப்பூட்டு...
உன் இதயம் இரந்து போனால்
உன் மூச்சின் வேகம் கூட்டு....!

மெளனம் என்ற மங்கை மொழியில்...
உன் கொழுசின் சத்தம் சேர்த்து
என் கர்வம் நீ போக்கு....!

காமத்தீயில் நீ தினம் மூழ்கி...
காதல் தீபம் ஏற்று...
அணை தாண்டூம் கடலலையாய்
என் அந்தரங்களை நீ அலசு...!


வெட்கம் என்ற விச வேரை
வெடி வைத்து நீ தகர்த்து .....
விருப்போடு விடை பகர்வாய்...!

காமன் கணை ஏந்தி...
பருவ வேட்டை நீயாடி...
பிறவிக்கடன் தீர்ப்பாய்...!

No comments: