2/23/08

கொன்றுவிடு...! என்னை வென்றுவிடு...!


கண்ணெதிரே தோன்றிவிடு...!
காதல் லீலை புரிந்துவிடு...!
கனவினில் கவி பாடிவிடு...!
என்னை கட்டியணைத்துவிடு...!

கண்களால் என்னை கலையவிடு...!
காமன் வித்தை கற்பித்துவிடு...!
உன் கண்மணியை கரையேத்திவிடு...!
அதில் காதல் பார்வை சேர்த்துவிடு...!


என்னை கண்ணசைந்து தூங்கவிடு...!
காதருகே மெல்லக் கடித்துவிடு...!
முத்தத்தால் என்னை முனகவிடு...!
முதுகோரம் உன் கை படரவிடு...!

உதட்டினால் என்னுயிரை போக்கிவிடு...!
உன்னுயிரை என்னில் கொடுத்துவிடு...!
வருடலால் உஸ்ணம் தணித்துவிடு...!
வன்முறை கலந்த வாழ்க்கைகொடு...!

உயிருடன் கலந்துவிடு...!
தினம் என்னைக்கொன்றுவிடு...!
மனதிற்குள் என்னை உலவவிடு...!
உன் மார்புக்குள் என்னைப்புதைத்துவிடு...!
என் மயக்கத்தை தெளியவிடு...!
என்னை மன்மதன் ஆக்கிவிடு...!
கொன்றுவிடு...! என்னை வென்றுவிடு...!

No comments: