4/27/08
கலியுகத்தின் சில கன்னியர் காதல்......(பாடல் வடிவாய்)
விடலை பாடும் வசந்த
இராகம் காதலே...
இதை உணரும் போது
மலிந்து போகும் ஊடலே...
இளமை வெடித்து துடிக்கும்
வேளை இனிக்கும் இந்த காதலே...
இளமை உதிர இமைமூடி
சாய்ந்து மாயும் இந்த காதலே...
இதை உணந்து நானும் பாடவா...?
அந்த உண்மைகளைச் சொல்லவா...?
(விடலை பாடும்.....)
கரிய கூந்தல் வருடும் போது
காமன் கண்கள் விழிக்குமே...
மாயை காட்டி ஆண் மனதை
மாற்றி அழிவில் கூட்டிச்செல்லுமே...
இளமை திரண்டு பருந்து மெருண்டு
உன்னை பார்த்து சிரித்திடும்.
தன்னை மறந்த காளை
விழிகள் கனவில் பாடி புலம்புமே...
இவள் நிழலை நெருங்கத் துடிக்குமே...
எந்தன் நெஞ்சில் வஞ்சமில்லை
நல்லிதயம் கொண்ட ஆண் மகன்.
பெண்மை தந்த வலிகள் எண்ணி
தினமும் புலம்பி அழுகிறேன்...
இன்னும் கொஞ்சம் சொல்லவா...?
என் சோகத்தை இரை மீட்கவா...?
(விடலை பாடும்....)
காமன் கண்கள் தாங்கி கொடிய
பார்வையால் என்னை செதுக்கிறாள்.
கண்ணைக் காட்டி இதழில் உரசி
மதியை மயக்கும் இவள் கூனி தான்...!
கொஞ்சிப்பேசி, பெண்மை பாய்ச்சி,
தீயில் கோலம் போட்டவள்.
தீனி தீர்ந்த பின்னர் ஆளை மாற்றி
மாலை மாற்றி போகிறாள்.
அமைதி குழைந்த ஜீவன் நான்
பேடு இழந்து வாடுறேன்...
வேசம் ஒன்றே இவள் வேலியாய்
தன் விருப்பம் போல வாழ்வதேன்..?
இது உண்மையான காதலா...?
இதில் உண்மை ஏதும் உள்ளதா..?
இதை உணர்ந்து தான் இன்று பாடுகிறேன்...
உள்ளம் தெளிந்து தான் உயிர் வாழ்கிறேன்..
(விடலை பாடும்.....)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment