7/6/08

புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களை பொங்கு தமிழுக்கு அழைப்பதற்கு எழுதிய கவிதை.....

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு...!

தீக்குள்ளே எங்களின் தேசம் . -எம்மை
தீர்த்திட துடிக்குது சிங்கள தேசம்...!
பேச்சிழந்து போகாமல் வீர வீச்சுடன் எழுவோம்.
விடுதலை பெறும் வரை எங்கள் வேகத்தை குறையோம்.

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு...!

விழ விழ எழுவோம்.
விரைவில் விடுதலை பெருவோம்.
பகை நிலை குழையும் வகை தொகை
தொகையாகத் திரள்வோம்...!
உலகத்தின் விழிகள் திறக்கும் வரை
விண்ணதிர குரல் கொடுப்போம்.....!

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு...!

வேர் அறுந்து விழ்வதற்கு நாங்கள்
விதை விதைக்கவில்லை. எங்கள்
கூடு அழிவதை ரசிப்பதற்கு - இந்த
குளிர்த்தேசம் புகவில்லை. உன்
தாயின் பாதம் தரை பதிந்த ஈழத்தை
பகை வாரி எடுக்க பல வருடமாய் திணறுகிறான்.
குண்டுகளை காவி கொட்டி உன் மண்ணை
தீ கொண்டு கருக்கிறான்....!
பிஞ்சுகளை பாவையரை இன்னும் வயசு
மிஞ்சியவரையும் ........
புலி என்று சிதைக்கிறான்.

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு...!

தடை போட்டு உன்னை
தடுப்பவன் யாரு..!
கூலி படை திரட்டி
உன்னை ஜெயிப்பவன் யாரு...!
காந்திதேசம் என்றாலும்,
கனடாதேசம் என்றாலும்,
புலியை பயங்கரவாதி என்றால்
நாங்கள் பயந்து ஒதுங்க மாட்டோம்....!
காலில் மண்டியிட்டு மாண்டிடமாட்டோம்.

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு...!

அகில உலக நாடுகளே....!
நாங்கள் அனைவரும் ஓர்
பாருங்களே...!
திக்கெங்கும் தமிழர் சத்தம் ஈழ
தேசத்தைக்காட்டுது......
தேசியத்தலைவரை தான்
தெய்வமாய் ஏற்குது...!
பகை பாசாங்கில் உன் கண்கள்
ஏனோ பலியாகிப்போகுது ....!
குண்டுகளை காவிக்கொட்டியவனை
மனிதத்தை துண்டு துண்டாய் சிதைத்தவனை
பந்தியில் வைத்து பரிமாறுகிறாய்.
எம்மை பயங்கரவாதி என்றா சொல்லுகிறாய்....!

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு...!

தன் இனம் அழிவதை ஓரத்தில்
நின்று பார்ப்பவன் மண்டு.
வேடிக்கை விடுத்து விருப்புடன் எழுவோம்.
தலை சாயாது என்று உலகிற்கு சொல்வோம்.

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு

ஓயாத அலை எழுந்த தேசம்
இன்னும் ஓராண்டில் ஈழம் விடிந்திடும் பாரும்.
மட்டக்களப்பு மன்னாரையும் பகை விட்டு விட்டு ஓடும்..!
யாழ் நகரை எம்படை ராஜ ஜாலத்தாலே வெல்லும்.
சங்கத்தமிழன் வாழ்வை ‍சரத்
பொன்சேகா குறிப்பதா....? பொறு
மண்டியிட்டு மாழும் மகிந்தாவின் சேனை

சாவின் ஓலங்கள் ஓயாது போனால்
மண்ணின் மைந்தர்களாய் நாம்
வீர மரணத்தையும் ஏற்போம்.

பொங்கு தமிழா பொங்கு
ஈழம் விடிய வேண்டிம் பொங்கு
சங்கு எடுத்து முழங்கி உண்மை
சங்கதியை இங்கு பொங்கு....

தங்கு தடையன்றி தரணி எங்கும் பொங்கு
சிங்களத்தின் கொட்டம் அடங்கும் வரை பொங்கு
சீறும் வேங்கைகள் சிரிக்கும் வரை பொங்கு
பொங்கு தமிழா பொங்கு
ஈழம் விடிய வேண்டும் பொங்கு.

No comments: