2/3/08

கணனியில் வந்தவள் கண்களை கசியச்செய்தவள்................


கணனியிலே கண்ணசைத்து கருவிழியால் கவர்ந்து விட்டாய்.காதருகே கன்னித்தமிழ் பேசி காதல் இச்சை தந்துவிட்டாய்.
உன் கயல்விழியை உலவ விட்டு என்னை காதலன் ஆக்கிக்கொண்டாய்.
கனவில் வந்து என்னை கைதியாக்கினாய்............!

தினம் தோறும் கைபேசியில் தேனீயென இரைந்தவளே........!
தேனாகி என் நாவில் தெவிட்டாமல் இனித்தவளே.........!
கொச்சைத் தமிழை கொஞ்சிப்பேசி கொடிய விசம் ஊட்டிவிட்டாய்...
தினம் வலியால் துடிக்கச்செய்தாய்..........................

காதல் விடம் தந்து என்னைக் காதலனாய் ஏற்றுக்கொண்டாய் !
கருவிழியால் கவி பாடி என் கண்ணில் கண்ணீராய் சேர்ந்துவிட்டாய் !

1 comment:

vino_p said...

your poems are very nice