2/5/08

இரத்ததில் தோய்ந்தும் எழுகின்ற என் தேச இரத்தங்களுக்காக எழுதியது..




செஞ்சோலையிலே சிறுசுகளை சிறகொடித்த சிங்களமே...! பிஞ்சுகளை சிதைத்த உன் நெஞ்சில் இடி விழுந்து போகதோ?..

கொலை வெறி கொண்டு பெரும் கிபிர் ஏறி வந்தனே... கொடுரத்தின் கோரத்தை குண்டாய் போட்டானே... விடலைகளாம் எண்பது பேர் புன்னகையை குழைத்தனே.. செஞ்சோலையில் கூடியிருந்த உயிர்களை குடித்தனே..


புத்தரின் போதனையில் தெளிந்ததா உன் இனவெறி? பூக்களை கசக்கி புளியும் உன்னில் இல்லை மனிதவிழி... பார் எங்கும் கரிகாலன் படை கயவன் உன்னைக்கலங்கடிக்க...! கதிகலங்கி சிறு நரி நீ எம் கலைக்கூடம் ஏன் சிதைத்தாய்?



வானரமே உன்னை துரத்தும் வரிப்புலிகள் நாமெடா!!!! வல்லவர்கள் என நினைத்தா முளை விடுபவர் உயிர் குடித்தாய்? மடி உமுழும் சிசுக்கூட உனக்கு புலியாக தெரியுதோ? பள்ளியிலே குண்டடித்து புலிப்பயிற்சிப் பாசறை என்கிறாய்.

பாதகனே! உன் வாயில் மண்ணள்ளிப்போட... மற வேங்கை காத்திருக்கிறான் நீ புறமுதுகுகாட்டி ஒட.. கொலை வெறியனே காடையா!!! தமிழன் உன் வீட்டு பெண்ணின் கம்பாயம் குழைத்தானா? கடிவாளம் இன்றி கட்டின்றி திரிந்தானா? ஆனால் நீ மட்டும் ஏனெடா அப்பாவிகளை அழிக்கிறாய்? வஞ்சகனே உன்னை ஒருநாள் வரிப்புலிகள் குடலுருவும்... உருவுங்குடல் ஊனமாகையில் உடன் இருந்த ஓநாய்கள் அதையுண்ணும்.


வான்வழி வந்த புலிவீரம் கண்டு பகை வாயடைத்து, மூச்சடைத்து, பேச்சிழந்தது கண்டீர்!!!!! கோழை இவன் கொண்டுவந்த கிபிர் குண்டு செஞ்சோலையிலே வெறிகொண்டு சரிதிடவே!!! என் இன உயிர்களை கருக்கிச்செல்ல‌ இதயம் வெடித்து குமுருது இங்கே!!!!!!!!!!! அன்றில் இருந்து இன்றுவரை அழுகின்றோம். அருகிக்கும் அன்னை இந்தியாவும் அணைக்கலையே.. ஆண்டவனும் கண் திறக்கலையே...! ஐ.நாவும் ஐம்புலனை அசைக்கலையே!


பயங்கரவாதம் பேசும் பகைசார் உலகே! உன் கண் திறந்து இதன் பதம் பார் உலகே! தினமொரு தலை பொழுத்தினுக்குள் தொங்குது. சிசு கூட முடமாக தாய் முந்தணைக்குள் உறங்குது! தமிழ் மண் சிவந்தது, தமிழிழம் அழுதது, தமிழிதயங்கள் வெடித்தது. யார் வந்து எம் துயர் துடைத்தார்?

அறம் பேசும் ஐ.நாவே மணிக்கு ஒரு மனிதன் தலை ஒடிக்கும் மகிந்தவை மனிதன் என்பாயோ? இதை அறம் என்பாயோ?

சாவுக்குள் வாழ்கின்றோம்... நாங்கள் சாவுக்குள் வாழ்கின்றோம். சாகமாட்டோம். நெருப்புக்குள் குளிக்கின்றோம்... நாங்கள் நெருப்புக்குள் குளிக்கின்றோம். நீறாக மாட்டோம்.. நாங்கள் நெருப்புக்குள் குளித்தவர்கள்.....


இரத்த வாடை இன்னும் அகழவில்லை... எமது இலக்கோ வெகு தொலைவில் இல்லை... அடிமையாக மாட்டோம். அடங்கி சாக மாட்டோம். என்றும் அன்னியனை அழிக்கும் அனலாய் தான் பிறப்போம்...


சிங்களத்தின் வஞ்சக வார்த்தைகள் காடையன் மனதில் மட்டும் வசம்ம்பு பூசும். மறத்தமிழன் மன உறுதிக்கு மழுங்கி சிதைந்த மண் கும்பங்கள். இறுதியாய் உறுதியாய் ஒன்று மட்டும் உண்மை.......


அன்னியன் வந்து அழிக்க நினைத்தாலும், எத்தனை நாடும் புலித்தடை போட்டாலும் புலிக்கொடி ஏற்றாமல் தமிழர் படை நாம் ஓயோம்....


புலித்தடை போட்டு புதிர் போடும் உலக நாடுகள் ஒருநாள் பொன்னாடை போர்த்தி புலி புகழும் காலம் உருவாகும்.


பொறுமை ! பொறுமை !


"தமிழரின் தாகம் தமிழிழ தாயகம்"

No comments: