குகை பதுங்கும் பகையையெல்லாம்
கலங்கடித்த தலைகள்..
கரிகாலன் சேனையிலே பகைக்கு
தலை வணங்கா மாமலைகள்..
சிங்களத்தின் வஞ்சதினால் சிறையாகிடலாம்
என்ற வேளையிலே வீர நெஞ்சருகே தொங்குகின்ற
நஞ்சருந்தி மடிந்த விதைகள்..
காந்தி தேசமும் கண்மூடியதால்
கடல்மடியில் தம் உயிரணைத்த அலைகள்..
குமரப்பா புலேந்திரன் என்னும்
தமிழர் மானம் காத்த புரட்சிப்புயல்கள்.