2/23/08

இவள் தான் என் அழகானவள்......


இவள் தானே என் அழகானவள்.
இரு விழிகளில் இதமானவள்.
இலக்கியங்களில் பொருளானவள்.
என் இதயத்தில் உறைகின்றவள்.

கனவினில் தினம் வருவாள் இவள்.
கருவிழியால் கவி தருவாள் இவள்.
கடலலையாய் என்னில் படர்வாள் இவள்.
காதருகே விடை மொழிவாள் இவள்.

கஸ்தூரி மஞ்சள் முக அழகில்
இவள் முகவரி தெரியும்...
துடிக்கும் கயல் காந்த்தங்கள்
என்னை அவளிடம் சேர்க்கும்...

முதுகோரம் தவளும் கருநீள் குழல்கண்டு
கங்கையும் சிரம் சாய்க்கும்....
அவள் தேன் சிந்தும் செவ்விதழ்கள்
என் உதட்டைத் தேனீயென மாற்றும்....

சில்லறையாய் உதிரும் புன்னகையால்
நவரத்தினங்கள் தம் இமை ஒடுக்கும்...
தினசரி இவள் நினைவால்
இருதயம் இயங்க மறுக்கும்...

பேதை முக‌ம் தேடும் விழிக‌ள்
இர‌வைப் ப‌க‌லாக்கும்...
இனிய‌வ‌ள் மொழி கேட்டு ராக‌ங்க‌ள் க‌வி எழுதும்...

பிர‌ம‌ன் அவ‌ன் பதித்த‌ உளி பாவையென‌
என்ன‌ருகில் ப‌ர‌வ‌ச‌மாய் க‌ண் சிமிட்டும்....

என் நெஞ்சிருக்கும் வ‌ரை...
நினைவிருக்கும் வ‌ரை....

நீ தானே என் அழ‌கான‌வ‌ள்.........

No comments: